முருகைய கவுண்டர்
நாமகரணம்
பெரும்பாலும் அது ஒரு முற்பகலாகத் தான் இருக்க வேண்டும். நாலு கட்டு வீட்டின் நடுவில் உள்ள வாசலில் இருந்து வெயில் மிதந்து வந்து கிழவர் முழங்காலின் மீது படிந்து மினுமினுக்கிறது . அவர் சிவப்பு. முழங்காலில் எண்ணை தடவியது போல வெயில் அங்கே முலாம் பூசியிருக்கிறது.இரண்டு காதுகளிலும் தங்கக் கடுக்கன் நல்ல சிவப்பு. கைகள் நீளம் சாட்டை மாதிரி நீளம் உள்ளத்தில் தைப்பது போல் உற்றுப்பார்க்கிற கண்கள் . பேச்சு ஒவ்வொரு சொல்லும் கணீர் கணீர் என்று வந்து விழும் சிரித்தால் சுற்றிலும் எல்லாரையும் வசப்படுத்துகிற பிரகாசம். அவர் வைத்த பெயர் அவர் குந்து காலிட்டு உட்கார்ந்திருக்கிறார் . நான் அவர் முழங்கால் உயரத்திற்கு நிற்கிறேன். என் தலையை என் தோளைத் தடவி விட்டு 'இவன் என் அம்சத்தோடயே இருக்கிறாமமா! எம் பேரையே இவனுக்கு வைங்க . முருகேசன்.'
முத்தாத்தா முருகைய கவுண்டர் சொன்னது. ஆழ்மனக்கிணற்றின் அடிப் பாறைகளில் தங்கி அகல மறுத்து நிற்கின்ற நினைவின் முதல் மழைத்துளிகளில் மூத்ததாய் நிலைத்திருக்கிறது .சுற்றிலும் யார் யார் இருந்தார்கள்? நான் ஏன் அவர் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறேன் ? ஒன்றும் நினைவில்லை. ஞாபகத் தகடுகள் எதை எந்த அளவு ஏன் பதித்து வைக்கின்றன என்பது என்றும் ஒரு விளங்காத மர்மம் தான்.
அப்போது வைத்த பெயர் பிடித்ததா பிடிக்கவில்லையா என்று அறிகிற உணர்வு இல்லை. அதை வெளியிடுகிற திறமையும் இல்லை.
அதற்கு முன்பு இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்ததால் ஒரு முறத்திலே குப்பை போட்டு அதில் புரட்டி குப்பன் என்று வைத்த பெயர் தற்போது பின் தள்ளி நின்றது . அடியோடு மறைந்து போகவில்லை . முருகேசனுக்கு வழிவிட்டு பிணககத்தோடு நின்றது. இன்னும் எனனை குப்பன் என்று அறிந்தவர்களும் அழைப்பவர்களும் எங்கோ இருந்து கொண்டு தானிருக்கிறார்கள்
இப்படிக் குப்பன் , பிச்சை, என்று மரணமே அட சீ! இதையெல்லாம் மதித்து ஏன் உயிர் வாங்க வேண்டும் என்று அலட்சியப் படுத்துகிற பெயர் வைத்தால் இரண்டு மூன்று பிரசவங்கள் வீணாகிப் பின் பிறக்கிற குழந்தை தப்பும் என்று ஒரு கணக்கு வைத்திருக்கிறது கிராமம்
எத்தனைப் பேருக்குத் தனக்கு வைக்கப்பட்ட பெயர் பிடித்திருக்கிறது? பிடிக்கிறதோ இல்லையோ நம் முகம் போல நம் உடல் உறுப்புகளில் ஒன்று போல கூடவே வாழ்ந்து பழகி விட்டதால் அதை ஏற்றுக்கொண்டு போகிறோம்.
'நான் உங்கள் அம்சத்தோடு பிறந்திருந்தால் உங்கள் பெயரை ஏன் வைக்கச் சொல்கிறீர்கள்?உங்கள் அம்சத்தோடு பிறந்திருப்பதாக நீங்கள் நினைப்பது சரியாகிவிடுமா? நாம் யார் அம்சத்தோடும் பிறக்க வில்லை. நான் என் அம்சத்தோடு தான் பிறந்திருக்கிறேன் .எனக்கு நானே பெயர் வைத்துக்கொள்வேன் ' இப்படிக் கேட்காமல் போன கேள்விகளின் எதிர்வினை போலத்தான் நானே எனக்கு வையவன் என்று பெயர் வைத்துக்கொண்டேன் முருகேசனும் பிடிக்காமல் போனதே காரணம்
தற்போது பெயர் வைக்கும் வல்லுனர்கள் பெருகிவிட்டார்கள் . வைத்த பெயரிலேயே சிறு மாற்றம் சொல்கிறார்கள் .பிறந்த தேதியைக் கணக்குப் போட்டு ஒரு பெயர் தேர்ந்தெடுக்கிறார்கள் .வைத்த பெயர் விளங்குகிறதா ? தீர்த்துச் சொல்லமுடிவதில்லை. ஏதோ ஒரு ஆறுதலில் எல்லாம் சரியென்று சொல்லத்தோன்றும் , உள்ளத்தில் முழு திருப்தி வராது.
என்னைப் பொறுத்தவரை குப்பன் முருகேசனாகி , முருகேசன் வையவன் ஆன போதும் ஆதங்கம் போகவில்லை. என்ன மடத்தனமாகப் பெயர் வைத்துக்கொண்டோம் . வையவன் என்று நம் பெயர் சொன்னால் என்ன விஜயனா ? வைரவனா? என்று கேட்டு வை. .ய... வ ...ன் என்று எழுத்து எழுத்தாகச் சொனனால் மனசில் சிரமப்பட்டு பதிய வைத்துக்கொண்டவர்களே பலர். இதில் ஜெயம் வரவில்லை . ஜங்கார ஹூங்காரம் வரவில்லை. ஏதோ வாலை மடக்கி ஓடுகிற நாயோ பூனையோ போல ஒரு சாது த்வனி !
அப்படி ஒரு பெயர் வைத்துக்கொண்டிருந்தால் அப்போது என்ன தோன்றியிருக்குமோ?
முருகைய கவுண்டர் என்ற பெயரோடு வாழ்ந்து மறைந்த என் முத்தாத்தா விற்கு அவர் பெயர் பிடித்து இருந்திருக்குமா? அவருக்கு யார் பெயர் வைத்திருப்பார்கள்?
நாமகரணம்
பெரும்பாலும் அது ஒரு முற்பகலாகத் தான் இருக்க வேண்டும். நாலு கட்டு வீட்டின் நடுவில் உள்ள வாசலில் இருந்து வெயில் மிதந்து வந்து கிழவர் முழங்காலின் மீது படிந்து மினுமினுக்கிறது . அவர் சிவப்பு. முழங்காலில் எண்ணை தடவியது போல வெயில் அங்கே முலாம் பூசியிருக்கிறது.இரண்டு காதுகளிலும் தங்கக் கடுக்கன் நல்ல சிவப்பு. கைகள் நீளம் சாட்டை மாதிரி நீளம் உள்ளத்தில் தைப்பது போல் உற்றுப்பார்க்கிற கண்கள் . பேச்சு ஒவ்வொரு சொல்லும் கணீர் கணீர் என்று வந்து விழும் சிரித்தால் சுற்றிலும் எல்லாரையும் வசப்படுத்துகிற பிரகாசம். அவர் வைத்த பெயர் அவர் குந்து காலிட்டு உட்கார்ந்திருக்கிறார் . நான் அவர் முழங்கால் உயரத்திற்கு நிற்கிறேன். என் தலையை என் தோளைத் தடவி விட்டு 'இவன் என் அம்சத்தோடயே இருக்கிறாமமா! எம் பேரையே இவனுக்கு வைங்க . முருகேசன்.'
முத்தாத்தா முருகைய கவுண்டர் சொன்னது. ஆழ்மனக்கிணற்றின் அடிப் பாறைகளில் தங்கி அகல மறுத்து நிற்கின்ற நினைவின் முதல் மழைத்துளிகளில் மூத்ததாய் நிலைத்திருக்கிறது .சுற்றிலும் யார் யார் இருந்தார்கள்? நான் ஏன் அவர் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறேன் ? ஒன்றும் நினைவில்லை. ஞாபகத் தகடுகள் எதை எந்த அளவு ஏன் பதித்து வைக்கின்றன என்பது என்றும் ஒரு விளங்காத மர்மம் தான்.
அப்போது வைத்த பெயர் பிடித்ததா பிடிக்கவில்லையா என்று அறிகிற உணர்வு இல்லை. அதை வெளியிடுகிற திறமையும் இல்லை.
அதற்கு முன்பு இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்ததால் ஒரு முறத்திலே குப்பை போட்டு அதில் புரட்டி குப்பன் என்று வைத்த பெயர் தற்போது பின் தள்ளி நின்றது . அடியோடு மறைந்து போகவில்லை . முருகேசனுக்கு வழிவிட்டு பிணககத்தோடு நின்றது. இன்னும் எனனை குப்பன் என்று அறிந்தவர்களும் அழைப்பவர்களும் எங்கோ இருந்து கொண்டு தானிருக்கிறார்கள்
இப்படிக் குப்பன் , பிச்சை, என்று மரணமே அட சீ! இதையெல்லாம் மதித்து ஏன் உயிர் வாங்க வேண்டும் என்று அலட்சியப் படுத்துகிற பெயர் வைத்தால் இரண்டு மூன்று பிரசவங்கள் வீணாகிப் பின் பிறக்கிற குழந்தை தப்பும் என்று ஒரு கணக்கு வைத்திருக்கிறது கிராமம்
எத்தனைப் பேருக்குத் தனக்கு வைக்கப்பட்ட பெயர் பிடித்திருக்கிறது? பிடிக்கிறதோ இல்லையோ நம் முகம் போல நம் உடல் உறுப்புகளில் ஒன்று போல கூடவே வாழ்ந்து பழகி விட்டதால் அதை ஏற்றுக்கொண்டு போகிறோம்.
'நான் உங்கள் அம்சத்தோடு பிறந்திருந்தால் உங்கள் பெயரை ஏன் வைக்கச் சொல்கிறீர்கள்?உங்கள் அம்சத்தோடு பிறந்திருப்பதாக நீங்கள் நினைப்பது சரியாகிவிடுமா? நாம் யார் அம்சத்தோடும் பிறக்க வில்லை. நான் என் அம்சத்தோடு தான் பிறந்திருக்கிறேன் .எனக்கு நானே பெயர் வைத்துக்கொள்வேன் ' இப்படிக் கேட்காமல் போன கேள்விகளின் எதிர்வினை போலத்தான் நானே எனக்கு வையவன் என்று பெயர் வைத்துக்கொண்டேன் முருகேசனும் பிடிக்காமல் போனதே காரணம்
தற்போது பெயர் வைக்கும் வல்லுனர்கள் பெருகிவிட்டார்கள் . வைத்த பெயரிலேயே சிறு மாற்றம் சொல்கிறார்கள் .பிறந்த தேதியைக் கணக்குப் போட்டு ஒரு பெயர் தேர்ந்தெடுக்கிறார்கள் .வைத்த பெயர் விளங்குகிறதா ? தீர்த்துச் சொல்லமுடிவதில்லை. ஏதோ ஒரு ஆறுதலில் எல்லாம் சரியென்று சொல்லத்தோன்றும் , உள்ளத்தில் முழு திருப்தி வராது.
என்னைப் பொறுத்தவரை குப்பன் முருகேசனாகி , முருகேசன் வையவன் ஆன போதும் ஆதங்கம் போகவில்லை. என்ன மடத்தனமாகப் பெயர் வைத்துக்கொண்டோம் . வையவன் என்று நம் பெயர் சொன்னால் என்ன விஜயனா ? வைரவனா? என்று கேட்டு வை. .ய... வ ...ன் என்று எழுத்து எழுத்தாகச் சொனனால் மனசில் சிரமப்பட்டு பதிய வைத்துக்கொண்டவர்களே பலர். இதில் ஜெயம் வரவில்லை . ஜங்கார ஹூங்காரம் வரவில்லை. ஏதோ வாலை மடக்கி ஓடுகிற நாயோ பூனையோ போல ஒரு சாது த்வனி !
அப்படி ஒரு பெயர் வைத்துக்கொண்டிருந்தால் அப்போது என்ன தோன்றியிருக்குமோ?
முருகைய கவுண்டர் என்ற பெயரோடு வாழ்ந்து மறைந்த என் முத்தாத்தா விற்கு அவர் பெயர் பிடித்து இருந்திருக்குமா? அவருக்கு யார் பெயர் வைத்திருப்பார்கள்?
No comments:
Post a Comment